குளவி கொட்டுக்கு இலக்காகி தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பதுளை மாவட்டம், ஹப்புத்தளை - தொட்டலாகல தோட்டத்தில் இன்று குளவிக்கொட்டுக்கு உள்ளான நிலையில் 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ஹப்புத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை,தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு,கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
