ராஜஸ்தானில் இடம்பெற்ற சிவராத்திரி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 14 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இடம்பெற்ற சிவ பாரத் ஊர்வலத்தின் மீது மின்சாரம் தாக்கியதல் 14 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது இன்று (08) இடம்பெற்றுள்ளதோடு, இதில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது அவர்கள் எடுத்து சென்ற ஆன்மீகக்கொடி சாலையின் மீது இருந்த மின்சார கம்பியில் மோதிய போதே மின்சாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காயங்களுக்கு உள்ளான 14 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடியை பிடித்துச் சென்ற சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |