இத்தாலிய பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த விபரீதம்
கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் நீராடச்சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் கடலலையில் சிக்குண்டு கடலில் மூழ்கியுள்ளார்.
இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சுற்றுலாப்பிரிவுக்குட்பட்ட உயிர்காப்புப்பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
47 வயதான இத்தாலிய பெண் ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சார்ஜன்ட் மஞ்சுள ( 72167 ), பொலிஸ் கான்ஸ்டபிள் லஹிரு (20373) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான் (19407 ) ஆகியோரினால் வெளிநாட்டுப்பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |