பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்! பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்கள்
பொரளையில் உள்ள தேவாலயமொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொரளை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தற்சயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேவாலய வளாகத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைகள் நிபுணர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan