முதலில் தேர்தலில் வெற்றி பெறுங்கள்: ரணிலுக்கு மொட்டு தலைமை பகிரங்கம்
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் குறித்து தீர்மானியுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை தகவல் அனுப்பியுள்ளது.
சர்வக்கட்சி மாநாட்டிற்கான ஜனாதிபதியின் அழைப்பைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் கூடியுள்ளது.
இதன்போது ஜனாதிபதி ரணில், 13ஆவது திருத்தம் குறித்தும் அதிகாரப்பகிர்வு குறித்தும் சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டிப் பேசுவது முறையல்ல என்ற விடயத்தை முக்கிய உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஏனெனில் 69 இலட்சம் பெரும்பான்மையைக் கொண்ட உண்மையான மக்கள் ஆணை பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது.
பெரும்பான்மையை கொண்ட கட்சி
கோட்டபாய ராஜபக்சவை முன்னிறுத்திய கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் 'சௌபாக்கிய தெக்ம' என்ற கொள்கை திட்டத்தில் 13ஆவது திருத்தம் குறித்து எந்தவொரு உறுதிமொழியோ இல்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியைத் துறந்துள்ள நிலையில் அவருடைய பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாகவே ரணில் உள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றும் பொதுஜன பெரமுனவே பெரும்பான்மையைக் கொண்ட கட்சியாக உள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
எனவே, கொள்கைக்கு எதிராகத் தீர்மானிக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இயலாது என்ற விடயத்தைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பசில் ராஜபக்சவிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அஸ்கிரி மற்றும் மல்வத்து உட்பட ஏனைய உயர் பௌத்த பீடங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
