வாகனம் திருத்துமிடத்தில் 13 வயது மாணவன் பலி! - சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்
பொலனறுவை - மெதிரிகிரிய, யாய 6, திக்கல்புர பிரதேசத்தில் வாகன திருத்துமிடமொன்றில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
மெதிரிகிரிய பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தமித் இந்துசர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள வாகன திருத்துமிடத்தில் ட்ரக்டர் வாகனமொன்றை கழுவிக் கொண்டிருந்த போது இன்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இந்நிலையில்,சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.