பிக்கு ஒருவரின் மோசமான செயல்! - 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை
வட்டவளை - ரொசெல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவரை விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியின் தந்தை வட்டவளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாரையின் பிரதமகுருவால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.



