மட்டக்களப்பில் உறவினரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி..!
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமி ஒருவரைக் கடத்திப் பாலியல் துர்நடத்தை செய்த குற்றச்சாட்டில் கைதான ஐ.ஆர்.சி. (IRC) பட்டியலில் உள்ள சந்தேகநபர் ஒருவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (08) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, அவ்வப்போது உறவினரான குறித்த சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்று தங்குவது வழக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சலேவிடமிருந்து 600 பக்க இரகசிய அறிக்கை..! வெளிச்சத்துக்கு வந்துள்ள வெளிவராத பல இரகசிய தகவல்கள்
பாலியல் துர்நடத்தை
சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தினமான ஜூலை 6 ஆம் திகதி இரவு, சந்தேகநபரின் தாயாருடன் அங்கு தங்கியிருந்த சிறுமியை, நள்ளிரவு நேரத்தில் சந்தேகநபர் வெளியில் வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமி மறுத்து சத்தமிட முயன்றபோது, அவரது வாயை மூடி வலுக்கட்டாயமாக வீட்டின் பின்புறப் பகுதிக்குக் கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி சத்தமிட்டதாகவும், பின்னர் மீண்டும் பிடிக்கப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குஉள்ளாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பின்னர் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்திருந்தாலும், சந்தேகநபர் உறவினர் என்பதனால் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் 119 அவசர சேவை ஊடாக தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸாரின் குற்றவாளிகள் கண்காணிப்பு பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (8) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam