13ஐ செயற்படுத்தினால் வடக்கு கிழக்கு காணிகள் இந்தியா வசமாகும்! அனுப்பப்பட்டுள்ள பகிரங்க மகஜர்
மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இல்லாமல் 13ஆம் திருத்தத்தை பூரணமாக செயற்படுத்த வேண்டாம்.
அவ்வாறு செயற்பட்டால் வடக்கு, கிழக்கு காணிகள் மற்றும் வளங்கள் இந்தியாவின் நேரடி ஆக்கிரமிப்புக்குள்ளாவதுடன் நாட்டு மக்கள் மத்தியில் ஐக்கியம் இல்லாமல் போகும் என எல்லே குணவங்ச தேரர் உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள பகிரங்க மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தை பூரணமாக செயற்படுத்தும் போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் உட்பட மேலும் பல அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க நேரிடுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,