மன்னாரில் 127 குடும்பங்கள் தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்க வைப்பு
மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் வெள்ள பாதிப்பு காரணமாகப் பதிக்கப்பட்ட 127 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேர் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக உள்ள ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், செல்வபுரம், தலைமன்னார், பேசாலை உட்பட அதிக வெள்ளப் பாதிப்புக்கள் காணப்படும் கிராமங்களில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் வெள்ளப்பாதிப்பு மற்றும் காலநிலை, மழை வீழ்ச்சி என்பவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியாகத் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் செயற்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக வடக்கு கிழக்குப்
பகுதிகளில் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கத்து.




