கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேட்சைக் குழுக்கள்
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று (04) வரை மொத்தம் 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் வைப்புத் தொகையை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
மாத்தளை மாவட்டம் தவிர்ந்த 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களுக்கு வைப்புத்தொகை செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு நேற்றைய நிலவரப்படி வைப்புத்தொகை செலுத்தப்படவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனசேத பெரமுன கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதுடன், மூன்று சுயேட்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி அக்டோபர் 4 ஆம் திகதி தொடக்கம் அக்டோபர் 11 மதியம் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri