நாட்டை விட்டு வெளியேறிய 120 வைத்தியர்களுக்கு நேர்ந்த கதி
நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத 120 சிறப்பு வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த (2022.01.09) முதல் (18.08.2023) வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்று இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு
ஆனால் அவர்களில், 120 வைத்தியர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இலங்கையின் 29 மயக்கவியல் நிபுணர்களில் 12 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பட்டியலில் உள்ள வைத்தியர்கள் நாடு திரும்பலாம், ஆனால், அவர்கள் சேவையில் ஈடுபட வேண்டுமாயின் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் முறையீடு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 13 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri