ஆளும் கட்சியில் இணையும் எதிரணியின் 12 உறுப்பினர்கள்: ஆளும் கட்சியின் உட்தரப்பு தகவல்
விமல் வீரவங்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Udaya Gammanpila) உட்பட அரசாங்கத்திற்குள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வரும் அணியினர் அரசாங்கத்திலிருந்து விலகினால், ஐக்கிய மக்கள் சக்தியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என ஆளும் கட்சியின் உட்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே(Diana Gamage) ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதுடன் ஹேசா விதானகே(Hesha Withanage), சமிந்த விஜேசிறி(Chaminda Wijesiri) ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ளனர் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இவர்களை தவிர ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மேலும் 9 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மை கட்சி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் ஒருவர், ஏற்கனவே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) சந்தித்துள்ளதுடன், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்படும் கடும் அதிருப்தி, வெறுப்பு மற்றும் கோபத்தைத் திசை திருப்ப, ஆளும் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க உள்ளதாகப் பொய்யான பரப்புரைகளை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri