வடக்கு - கிழக்கில் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடிய 115 பேர் இதுவரை உயிரிழப்பு (Photos)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடியலைந்த 115 பேர் இதுவரை நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடியலைந்து சொல்லொண்ணா துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும், ஏனைய உறவினர்களின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு தமது உறவுகளைத் தேடியலைந்த 115 உறவுகள் இதுவரை நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அதில் வவுனியா மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேசத்தின் தலையீடுகளைக் கோரியும், ஐ.நா தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் தமது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
