சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக முறையில் பசறை உடகம பரகாகந்தூர பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இந்நிலையில், குறித்த பகுதிக்கு சென்று தேடுதலை மேற்கொண்ட போது 11 நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு மாணிக்கக் கல் அகழ்விக்கு பயன்படுத்தப்படும் கல் உடைக்கும் இயந்திரம் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
தொடர்ந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan