கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் மரணம்! பொலிஸ் தலைமையகம் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர், இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சித் தகவல்
கடந்த இரண்டு வருடங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரங்களை அவர் மேலும் வெளியிடுகையில்,
2024 ஆம் ஆண்டில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 595 உயிரிழப்புகளும், 2025ஆம் ஆண்டில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட 376 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தரவுகளின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரை, நாட்டில் நீரில் மூழ்கியமையால் மொத்தம் 1,093 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுள்ளார்.
எனவே, விடுமுறை நாள்களிலும், குறிப்பாக வரவிருக்கும் பொசன் பௌர்ணமி பண்டிகைக் காலத்திலும் ஆறுகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri