கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு - வேலைக்காக ஒன்றுகூடியவர்களால் பதற்ற நிலை
துருக்கியில் வேலைபெற்று தருவதாக ஆயிரக்கணக்கானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போலியான முறையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் நேர்முக பரீட்சைக்கு சமூகம் அளித்துள்ளனர்.
எனினும் அவ்வாறு எந்தவொரு வேலைக்காகவும் யாரையும் அழைக்கப்படவில்லை என தெரிய வந்த நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்தன மையத்தில் வேலை தேடுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து வன்முறையாக மாறிய நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சமூக ஊடக தளங்களில் அறிவிப்பை வெளியிட்டு மூன்றாம் தரப்பினர் போலியான வேலை நேர்காணலை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
துருக்கியில் சில வேலை வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த வகையான போலி வேலை மோசடிகளுக்கு இரையாவதை விட, எங்கள் அதிகாரப்பூர்வ அறிவித்தல்களை பின்பற்றுமாறு வேலை தேடுபவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam