கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு - வேலைக்காக ஒன்றுகூடியவர்களால் பதற்ற நிலை
துருக்கியில் வேலைபெற்று தருவதாக ஆயிரக்கணக்கானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போலியான முறையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் நேர்முக பரீட்சைக்கு சமூகம் அளித்துள்ளனர்.
எனினும் அவ்வாறு எந்தவொரு வேலைக்காகவும் யாரையும் அழைக்கப்படவில்லை என தெரிய வந்த நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்தன மையத்தில் வேலை தேடுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து வன்முறையாக மாறிய நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சமூக ஊடக தளங்களில் அறிவிப்பை வெளியிட்டு மூன்றாம் தரப்பினர் போலியான வேலை நேர்காணலை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
துருக்கியில் சில வேலை வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த வகையான போலி வேலை மோசடிகளுக்கு இரையாவதை விட, எங்கள் அதிகாரப்பூர்வ அறிவித்தல்களை பின்பற்றுமாறு வேலை தேடுபவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan