ஆயிரக்கணக்கான வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல், இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாரதி அனுமதிப்பத்திரம்
முன்னதாக, சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு வேரஹெரவில் உள்ள திணைக்களத்தின் அலுவலகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டியிருந்தது.
இந்த செயல்முறையை எளிதாக்குவதே புதிய பிரத்தியேக கருமபீடத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறைந்த கட்டணத்தில் (2,000 ரூபா) சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதால், தொழில்முறை உள்ளூர் சுற்றுலா வாகன சாரதிகளின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கூறி, தேசிய சுற்றுலா வாகன சாரதிகள் சங்கம் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 20 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
