வவுனியா வடக்கில் நூறு வயதுடைய வயோதிப தாய்க்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
வயோதிப தாயொருவருக்கு நேற்றையதினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால் முதலாவது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்று வருகின்றனர். சிலர் அச்சம் காரணமாகத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை.
ஆனால் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.
அந்தவகையில் நெடுங்கேணி, மருதோடை கிராமத்தில் வசிக்கும் 100 வயது நிரம்பிய அன்னை ஒருவர் கோவிட் தடுப்பூசி போட விரும்புவதாகக் கூறியதற்கிணங்க வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி நேற்றையதினம்(11) வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போட வேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவரிற்குத் தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.


Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
