மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை நிர்மாணிக்க 100 மில்லியன் ஒதுக்கீடு - சிங்கள ஊடகம் தகவல்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மஹரகம நகரசபை உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் வெளியான காணொளியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் பிரதமரின் செலவினத் தலைப்பின் கீழ் இதனை நிர்மாணிப்பதற்கான நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
இதற்கமைய, கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது நாடளாவிய ரீதியில் ஆளும் கட்சியின் பல அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri