கொழும்பில் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு: வெளியாகிய அறிவிப்பு
கொழும்பில் சில பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய நாளை(20) இரவு 11 மணி முதல் மறுநாள்(21) காலை 9 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணி
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4 பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.