செம்மணியில் இன்று 04 என்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம்(22.07.2026) நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம் 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 455 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிபுணர் குழுவினருடன் அகழ்வுப்பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.


