அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை: பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர சூழலைச் சார்ந்தது என ஸெலென்ஸ்கி அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவது, மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் உண்மையான இராஜதந்திர வாய்ப்புகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில் அபுதாபியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
புதிய வழிமுறைகள்
இதன் காரணமாக, உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு புதிய வழிமுறைகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, பாதுகாப்பான சூழல் நிலவினால் மட்டுமே பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri