தமிழகத்தில் குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமினால் ஈர்க்கப்பட்டார்: இந்தியத் தேசிய புலனாய்வு

Tamil nadu Sri Lanka Easter Attack Sri Lanka
By Sivaa Mayuri Apr 21, 2023 04:15 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 இல் இலங்கை குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிமினால். ஈர்க்கப்பட்டவரே 2022ஆம் ஆண்டு தமிழகம் கோயம்புத்தூரில் சிற்றூந்து வெடிகுண்டு வெடிப்பை நடத்தியவர் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவு கூறியுள்ளது.

கோவையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற சிற்றூந்தில் வெடிப்பில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஜமீஷா முபீன் தொடர்புடைய 6 பேர் மீது இந்தியத் தேசிய புலனாய்வுப்பிரிவு நேற்றைய தினம் (20.04.2023) குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. 

கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பழைமையான அருள்மிகு கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகில் கடந்த அக்டோபர் 23ஆம் திகதி இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமினால் ஈர்க்கப்பட்டார்: இந்தியத் தேசிய புலனாய்வு | Zahran Hashim Contact In Tamilnadu Blast

இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு

ஜமேஷா முபீன் ஓட்டிச் சென்ற சிற்றூந்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் சாதனம் கோயிலுக்கு முன்பாக வெடித்துச் சிதறியுள்ளது. இதன்போது முபீன் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு முபீன் ஐஎஸ்.ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அவர் இதற்காக விசுவாசப் பிரமாணம் எடுத்ததாகவும் தேசிய புலனாய்வுப்பிரிவின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட முபீனின் நண்பரான முகமது அசாருதீனிடமிருந்து மீட்கப்பட்ட பென் டிரைவ், முபீனின் காணொளிப் பதிவுகளைக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமினால் ஈர்க்கப்பட்டார்: இந்தியத் தேசிய புலனாய்வு | Zahran Hashim Contact In Tamilnadu Blast

பயங்கரவாதத் தாக்குதல்

அதில், அவர் தன்னை தௌலத்-இ-இஸ்லாமியா (அல்லது இஸ்லாமிய அரசு) உறுப்பினராக அடையாளப்படுத்தியிருந்ததாகவும் இந்தியப் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முபீன், 'காஃபிர்களுக்கு' அதாவது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராகத் தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி, தியாகியாக வேண்டும் என்ற தனது நோக்கத்தைப் பற்றி அதில் விரிவாகப் பேசியிருந்தார்.

அத்துடன், முபீனின் வீட்டிலிருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளை மீட்டதாக புலனாய்வுப்பிரிவு கூறியுள்ளது.

அதில், இஸ்லாமிய சட்டங்களுடன் ஒத்துப்போகாத தற்போதைய ஜனநாயக அமைப்பு பற்றியும் விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமினால் ஈர்க்கப்பட்டார்: இந்தியத் தேசிய புலனாய்வு | Zahran Hashim Contact In Tamilnadu Blast

கோயம்புத்தூரில் நடந்த தாக்குதல்

அரசு அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்காக்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள், தொடருந்து நிலையங்கள் மற்றும் சில உள்ளூர் கோவில்கள் உள்ளிட்ட 'இலக்குகள்' பற்றிய குறிப்பும் அதில் இருந்ததாக ஏஎன்ஐ என்ற இந்திய புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய ஸ்டேட் ஆஃப் கொராசன் அரசின் இணைய இதழான 'வொய்ஸ் ஆஃப் கொராசன்' இதை உறுதிப்படுத்தியது, 'பசு மற்றும் எலிகளை வழிபடும் அசுத்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு செய்தி' என்ற தலைப்பில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்கேபி என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

முபீனுக்கு ஆயுதங்களை ஏற்பாடு செய்வதில் நண்பர்களான முகமது அசருதீன், முகமது தல்ஹா, ஃபரோஸ் கான், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அஃப்சர் கான் ஆகியோர் உதவினார்கள்.

தமிழகத்தில் குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமினால் ஈர்க்கப்பட்டார்: இந்தியத் தேசிய புலனாய்வு | Zahran Hashim Contact In Tamilnadu Blast

சஹ்ரான் ஹாஷிமின் 

ஃபரோஸ், ரியாஸ் மற்றும் நவாஸ் ஆகியோர் சிற்றூந்தில் வெடிபொருட்கள் மற்றும் எரிவாவு கொள்கலன்களை ஏற்றி, அதை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றியுள்ளனர்.

இதேவேளை, இஸ்லாமிய அரசின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க சஹ்ரான் ஹாஷிமின் மற்றும் மற்றொரு இலங்கை குண்டுதாரி - முகமது அசான் ஆகியோர் 2017 மற்றும் 2018இல் இந்தியாவுக்குப் பயணம் செய்தனர் என்றும் இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு தமது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US