நானுஓயாவில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பம் (Photos)
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான 'யுக்திய' என்னும் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நானுஓயா பிரதான நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றையதினம் (28.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீவிர சோதனை நடவடிக்கை
இதன் பொது நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் செல்லும் கனரக வாகனங்களில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் , வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரியும் இளைஞர்களையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நானுஓயா நகரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் அடிக்கடி பரிசோதனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri