யாழில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு
யாழ். காரை நகர் பகுதியிலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் இது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை என செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டினை அவர் இன்று(06.06.2024) நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி யாழ். காரை நகர் கிராம சேவையாளர் அலுவலகமொன்றில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நிற்பதாக கிராம சேவையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்.
இந்நிலையில் அதே மாதம் 18 ஆம் திகதி பொன்னாலையில் சிதைந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.அந்த கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. இது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை.
வடக்கு கிழக்கிலே பொலிஸாருடைய அராஜகங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்ற நிலையில், இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்பது தொடர்பில் எங்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
