தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன்

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis
By Rusath Jun 17, 2022 07:43 AM GMT
Report

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்களை பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு அக மற்றும் புற காரணங்கள் பல கூறப்பட்டாலும் வளங்கள் முறையாக முகாமை செய்யப்பட வேண்டிய கட்டாய தேவையும் இங்கு மேலோங்கிக் காணப்படுகின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின், மண்முனைப்பற்று பிரதேச கிராமிய குழு உறுப்பினர்களுடனான விசேட மாதாந்த கலந்துரையாடல் நேற்று(16) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் தமக்கான அரசியல் தலைமைகளை தெரிவு செய்வது அறிக்கைகள் விடுவதற்காகவும் நாடாளுமன்ற கதிரைகளை சூடாக்கி தமது தனிப்பட்ட சுய லாபத்திற்காக ஏனைய அரசியல் தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் திட்டித் தீர்ப்பதற்காகவுமல்ல, தமக்கான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது அதற்கு முகம் கொடுத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே மக்கள் வாக்களிக்கிறார்கள்.

தரிசு நிலங்கள்

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியினை எவரும் இன்னொருவர் மீது சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. நாடாளுமன்றத்தில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேபோன்று நாட்டின் ஜனாதிபதியும் இதற்கான தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

அதேபோன்று நாட்டின் அரச இயந்திரத்தினை அமுல்படுத்துகின்ற அதிகாரிகளின் நெறிப்படுத்தலும் அத்தியாவசியமானது.

உணவு பாதுகாப்பு விசேட திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற தரிசாக கிடைக்கின்ற அனைத்து அரச காணிகளிலும் பயிர் செய்வதற்கும், தானியங்களை வளர்ப்பதற்கும், கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கும் இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள் அவர்களுக்கான காணிகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

அதேபோன்று பொருளாதார தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதனால் அல்லது அறிக்கைகளை வாசித்துக் கொண்டு இருப்பதனால் சாதாரண கூலி தொழிலாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கப்போவதில்லை.

நாட்டில் இடம்பெற்ற யுத்த்தினால் எமது மாவட்டத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு சென்றிருந்தன.

அதேபோன்று யுத்தத்தினால் விசேட தேவையுடையவர்களும், கூலித் தொழிலாளிகளும் அதிகமாக காணப்படுகின்றார்கள். அவர்களின் வறுமையை போக்குவதற்கு இவர்களின் நாளாந்த வாழ்வாதாரத்திற்கான நிவாரணங்களை வழங்கவேண்டிய நிலையுள்ளது.

ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் 

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

இளைஞர் யுவதிகளும் தங்களது ஓய்வு நேரங்களில் வீட்டு தோட்டத்திலும் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஏற்ப்பாட்டில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தரிசு நிலங்களை பயனுள்ளதாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்:பிரசாந்தன் | Youth Make Barren Lands Useful Prasanthan

இதனை உணர்ந்து கட்சியின் ஒவ்வொரு போராளிகளும் இவ்வாறான பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கட்சியின் தலைவரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அனைத்து பிரதேச குழு தலைவர்களும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US