இளைஞர் கழக தேசிய வேலைத்திட்டம் வவுனியாவில் ஆரம்பம்
இளைஞர் அனைவரும் ஒன்று கூடும் இடம் இளைஞர் கழகம் என்னும் தொனிப் பொருளிலான தேசிய வேலைத் திட்டம் வவுனியாவில் நேற்று (01) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாடு பூராகவும் இளைஞர் கழகங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முதலாவது இளைஞர் கழகம்
அதற்கு அமைவாக, கடந்த இரு வருடங்களாக இளைஞர் கழகங்கள் அமைக்கப்படாத நிலையில் வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது இளைஞர் கழக அங்குரார்ப்பணம் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் ஏரங்க குணசேகரவின் பங்குபற்றலில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் ஏரங்க குணசேகர் கலந்து கொண்டிருந்ததுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் காமினி, உதவிப் பணிப்பாளர் ரவீந்திர ரூபசிங்க, மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி சிவானி மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

