வெளிநாட்டிலிருந்து திரும்பிய சாவகச்சேரி இளைஞர் விபத்தில் மரணம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியில் நேற்று மாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியைச் சேர்ந்த 24 வயதான நிரோஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்தவர் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது