சாவகச்சேரியில் ஒருதொகை கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது
யாழ்.சாவகச்சேரியில் கஞ்சாவுடன் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கெற்பேலி பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்படட கஞ்சா பொதிகள் சுமார் 20 இலட்சம் பெறுமதியுடைய 19 கிலோ 180 கிராம் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞனுடன் வேறு யாரேனும் நபர்கள் தொடர்பில் உள்ளார்களா என்ற கோணத்தில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.