வவுனியாவில் இளம் குடும்பப்பெண்ணின் விபரீத முடிவு
வவுனியா - தோணிக்கல் பகுதியில் நேற்றுமுன்தினம் இளம் குடும்பப்பெண் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோணிக்கல் பகுதியில் திருமணமாகி இரண்டு மாதம் நிறைந்த கைக்குழந்தையுடன் வசித்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவதினத்தன்று இரவு வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற பிறந்த தின மதுவிருந்து
கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தனது கணவருக்கு, குறித்த பெண் பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்தி வீட்டிற்கு வருமாறு அழைத்தபோதும் கணவன் வீட்டிற்கு வரவில்லை என தெரியவருகிறது.
மதுபோதைக்கு அடிமையாகிய கணவனின் நடவடிக்கையால் மனமுடைந்து குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சடலத்தை மீட்ட பொலிஸார்
மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri