இளம் தாய்க்கு நேர்ந்த கொடுமை! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
இருபத்தி ஐந்து வயதான இளம் தாயொருவருக்கு பாலியல் சீண்டல்கள் செய்த குற்றச்சாட்டில் 70 வயதான வயோதிப மருத்துவர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (11) அநுராதபுர உயர்நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சை
கடந்த 2020ம் ஆண்டு அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள தனியார் சிகிச்சை நிலையமொன்றில் கருப்பைப் பையினுள் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனமொன்றை அகற்றுவதற்காக குறித்த மருத்துவரிடம் வந்த இளம் தாயொருவரிடம் அந்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டு பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளனின் மூலம் குறித்த மருத்துவர் பாலியல் சீண்டல்கள் செய்த விவகாரம் நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை
அதனையடுத்து நேற்றைய தினம் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த மருத்துவருக்கு பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுரம் திசாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான மருத்துவர் ஒருவருக்கே மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 2 நாட்கள் முன்

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam
