கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பாக இயங்கும் ஸ்மார்ட் கேட்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு கடவைகள் அல்லது மின்-கடவைகள் எனப்படும் நான்கு சுய சேவை வாயில்கள் சமீபத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், முழுமையாக தானியங்கி முக அங்கீகார அமைப்பு செயல்படுத்தப்படும்.
ஸ்மார்ட் கேட்
இது மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகளை திறமையாகவும் விரைவாகவும் அடையாளம் காண உதவும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் இயக்கப்படும் இந்த கடவைகள் பயணிகளின் முக பயோமெட்ரிக்ஸை அவர்களின் கடவுச்சீடடு சிப் அல்லது பின் இறுதி அமைப்பில் சேமிக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும்.
இது தடையற்ற மற்றும் பாதுகாப்பான அடையாள சரிபார்ப்பை உறுதி செய்யும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan