புத்தளத்தில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் துரதிஷ்டவசமாக பலி
புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக விழுந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (10.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது, பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், பின்னால் வருகை தந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam