யாழில் இரவு வேளையில் இளைஞர்கள் மீது இராணுவம் - விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் (VIDEO)
யாழ்ப்பாணம் - மானிப்பாய் ஆலடி சந்தியில் இரவு வேளையில் இளைஞர்கள் மீது இராணுவம், விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் ஆலடிச் சந்திக்கு அண்மையில் இன்று இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய பாலமுரளி நிறோசன் என்ற இளைஞர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,பொலிஸாரினால் இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த விதமான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.