மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் குடும்பப் பெண்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இளம் யுவதியொருவர் 25 மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட யுவதி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளம் யுவதி கடந்த வருடம் திருமணம் முடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட விரக்தியில் மனைவி 25 மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின் கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam