வெளிநாடு செல்ல முயன்ற இனைஞனின் விபரீத முடிவு
புத்தளத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முந்தல் பகுதியை சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞனே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் வெளியில் சென்ற நிலையில் தந்தை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் வீட்டின் அறையொன்றுக்குள் உயிரை மாய்த்துள்ளார். உடனடியாக அவரை முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும், இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார். இதற்காக வீட்டில் பணம் கேட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பணம் இல்லை எனவும் அதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக தந்தை தெரிவித்திருந்த போதும் இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
