தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த இளம் தமிழக வீரர்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் 22 வயதே ஆகும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலமே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி
இந்த வருடம் நிறைவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்களை குவித்தார்.
அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்த போதிலும் சாய் சுதர்ஷனின் துடுப்பாட்டம் பெரிதும் பேசப்பட்டது.
மேலும், இந்திய அணியில் இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ருதுராஜுடன் இணைந்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகியுள்ள சா.தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி விதுர்ஷாவின் நெகிழ்ச்சி பதிவு
யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ள புயல்: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |