வெள்ளவத்தையில் சோகம்: அடுக்குமாடியிலிருந்து வீழ்ந்து இளைஞன் பலி
கொழும்பு வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உருத்ரா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 20 வயதான இளைஞன் தவறி வீழ்ந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
சடலம் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this
வெள்ளவத்தையில் பெரும் சோகம்: அடுக்குமாடியிலிருந்து வீழ்ந்து இளைஞன் பலி