யாழ். ராணி தொடருந்து சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா (Photos)
கிளிநொச்சியில் யாழ். ராணி தொடருந்து சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (28.07.2023) கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ். ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது.


அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், தொடருந்து நிலைய ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து இலகுபடுத்தலுக்காக சேவையில் ஈடுபட்ட யாழ் ராணி, தனது முழுமையான சேவையை வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |