ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்காக யாப்பை மாற்ற முடியாது! கெஹெலிய ரம்புக்வெல்ல
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை முக்கியமாக ஆடைத்தொழிலுடன் தொடர்புடையது.குறிப்பாக இலங்கை பொருட்களின் ஏற்றுமதியுடன் தொடர்புடையது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜி.எஸ்.பி பிளஸைப் பொருத்தவரை சில விடயங்களில் நேரடியான தொடர்புகள் காணப்படும் விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த முடியும்.
எடுத்துக்காட்டாக, ஆடைத் தொழிற்சாலைகள் ஏதேனும் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றதெனின், அல்லது ஆடைகளின் உற்பத்தித் தரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்றதாக இல்லாவிட்டால், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிசனைகள் நியாயப்படுத்தப்பட்டு புரிந்து கொள்ளப்படலாம்.
ஆனால், இலங்கை குடிமக்களின் உரிமையான நாட்டின் அரசியலமைப்பை மாற்றுமாறு கோரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவருவதற்கு ஒரு தனி நிறுவனம் அல்லது அமைப்பின் ஒரு சர்வதேச அமைப்பின் எந்தவொரு நியாயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நிச்சயமாக ஏதோ ஒரு திட்டமிட்ட செயலாகவே இதனை
பார்க்கின்றேன். குடிமக்களின் உரிமைகள் மற்றும் இலங்கையின் இறையாண்மையை
பாதுகாக்கும் அதேவேளையில் இலங்கை வெளிவிகார அமைச்சு இந்த விடயத்தை கையாளும் என்றும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 4 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam