எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவு – இழப்பீடு பெற சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி நிறுவனத்துடனான சந்திப்பிற்காக இலங்கை குழுவொன்று சிங்கப்பூர் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தின தலைமையிலான இலங்கை தூதுக்குழு இம்மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லவுள்ளது.
பேரழிவுக்கான அதிகபட்ச இழப்பீடு பெறும் முயற்சியில் பிரதிநிதிகள் குழு ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் காப்புறுதி நிறுவன பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
மேலும், இந்த கலந்துரையாடலில் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
கலந்துரையாடலுக்காக குறித்த காப்புறுதி நிறுவனம் இலங்கைக்கு வருகைதர மறுத்ததை அடுத்து இலங்கை குழுவின் இந்த பயணத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |