கொரோனா தொற்று முடிவுக்கு வருகின்றது! வெளியாகியுள்ள அறிவிப்பு
மிக மோசமான கொரோனாத் தொற்றுநோய் இறுதியாக முடிவடையும் என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் இயக்குனர் வைத்தியர் சந்திம ஜீவந்தர (Dr. Chandima Jeewandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்வீட் செய்துள்ள அவர், அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய முடிவுகளை கோடிட்டுள்ளார்.
அந்த முடிவுகளின் அடிப்படையில், தொற்றுநோயின் மோசமான நிலை இறுதியாக முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
The worst of the pandemic may finally be over, according to new modelling results from a consortium of researchers advising the U.S. Centers for Disease Control and Prevention.
— Chandima Jeewandara (@chandi2012) September 26, 2021
அமெரிக்காவை பொறுத்தவரை 5-11 வயது வரையிலான பிள்ளைகளுக்கான தடுப்பூசிகள், தொற்றுக்களின் எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5-11 வயதான பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் காரணமாக புதிய பரவுதல் மாறுபாடு எதுவும் தோன்றாது என அமெரிக்க பென் மாகாண ஆராச்சியாளர் கட்டோரினா ஷியா தெரிவித்துள்ளார்.
அவரின் ஆராச்சியின்படி, 2022க்குள், அமெரிக்கா முழுவதும் கோவிட் - நோய்த்தொற்றுகள் மெதுவாகவும் சீராகவும் நாளொன்றுக்கு சுமார் 140,000 இருந்து ஒரு சுமார் 9,000 ஆகக் குறையும், மேலும் இறப்புகள் ஒரு நாளைக்கு சுமார் 1,500 இருந்து 100க்கும் குறைவாகக் குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் அனைவரும் பங்கு வகிக்க முடியும் என்றும் கட்டோரினா ஷியா குறிப்பிட்டுள்ளார்.