உலக நாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது: ரணில் அறிவுறுத்தல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைக்கான சீனத்தூதுவர் Qi Zhenghongக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
தனது டுவிட்டர் செய்தி ஊடாக ஜனாதிபதி இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
During a meeting with H.E. Qi Zhenghong, Ambassador of China, I reiterated Sri Lanka's firm commitment to the one-China policy, as well as to the UN Charter principles of sovereignty and territorial integrity of nations. (1/2)
— Ranil Wickremesinghe (@RW_UNP) August 4, 2022
ஒன்றுப்பட்ட சீனா என்ற கொள்கை மாத்திரமின்றி, ஐக்கிய நாடுகளின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு தொடர்பான இணக்கப்பாடுகளின் அடிப்படைகள் தொடர்பில் இலங்கை கடும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என சீனத்தூதுவரிடம் வலியுறுதித்தியதாக ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.
உலகின் தற்போதைய அனர்த்தங்கள் மேலும் உக்கிரமடைவதை அதிகரிக்கும் ஆத்திரமூட்டும் செயல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன் உலகின் ஏனைய நாடுகளுக்கு இடையிலான கௌரவம்,நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை, அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதல்களை ஏற்படுத்திக்கொள்வதை தவிர்த்தல் போன்றவை முக்கியமானது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.