கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்
2021, இன் 3 வது காலாண்டில் கோவிட் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிநிதியான கலாநிதி அலாகா சிங் கை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தமது அமைச்சகத்தில் வைத்து வரவேற்றார்.
இதன்போது இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதில் உலக சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவை அவர் கோரியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி, கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதிலும், இந்த காலகட்டத்தில் மற்ற சுகாதார சேவைகளின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதிலும் தமது அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டின் 3 வது காலாண்டில் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக
அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan