கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் 24பேர் உயிரிழப்பு!- செய்திகளின் தொகுப்பு
கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 24பேர் உயிரிழந்துள்ளனர்.
கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை 24 உடல்கள் தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள பேட்கன் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் 87 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் எல்லையில் தொடங்கிய மோதல்கள் பீரங்கிகள் மற்றும் ரொக்கெட் லொஞ்சர்கள் சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான சண்டையாக வளர்ந்தது.
ஷெல் தாக்குதலின் ஒரு பகுதியாக, தாஜிக் படைகள் பிராந்திய தலைநகரான பேட்கனை ரொக்கெட்டுகளால் தாக்கின. கிர்கிஸ்தானின் அவசரகால அமைச்சகம், சண்டையால் சூழப்பட்ட பகுதியிலிருந்து 136,000 மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri