கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் 24பேர் உயிரிழப்பு!- செய்திகளின் தொகுப்பு
கிர்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையில் எல்லையில் ஏற்பட்ட மோதலில் 24பேர் உயிரிழந்துள்ளனர்.
கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை 24 உடல்கள் தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள பேட்கன் பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் 87 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் எல்லையில் தொடங்கிய மோதல்கள் பீரங்கிகள் மற்றும் ரொக்கெட் லொஞ்சர்கள் சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான சண்டையாக வளர்ந்தது.
ஷெல் தாக்குதலின் ஒரு பகுதியாக, தாஜிக் படைகள் பிராந்திய தலைநகரான பேட்கனை ரொக்கெட்டுகளால் தாக்கின. கிர்கிஸ்தானின் அவசரகால அமைச்சகம், சண்டையால் சூழப்பட்ட பகுதியிலிருந்து 136,000 மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan