உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சயில் சிரமதானப்பணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் பூநகரி நாச்சிக்குடா கடற்கரை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
உலக சுற்றாடல் தினமானது இவ்வருடம் Ending Plastic Pollution எனும் கருப்பொருளினை மையமாக கொண்டு மே 30ஆம் திகதி முதல் ஜுன் 5ஆம் திகதி வரை சுற்றாடல் வாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அந்தவகையில் மே 30ஆம் திகதி பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம்
மே 31ஆம் திகதி வளிமாசடைதல் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைத்தல்
திகதி விபரங்கள்
ஜுன் 1ஆம் திகதி சுற்றாடலை தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
ஜுன் 2ஆம் திகதி உயிர் பல்வகைமை பாதுகாப்பு
ஜுன் 3 ம் திகதி நீர் மற்றும் நீர் மூலோபாயங்களை பாதுகாத்தல்
ஜுன் 4ம் திகதி கரையோர வலையங்களை தூய்மைப்படுத்தல்
ஜுன் 5 ம் திகதி மரநடுகை மற்றும் உலக சுற்றாடல் தின கொண்டாட்டம்.
அந்த வகையில் நாளைய தினம் கடற்கரையை சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி நாச்சிக்குடா கடற்கரை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் பூநகரி பிரதேச செயலகம், பூநகரி பிரதேச சபை, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம், கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பங்குபற்றுடன் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.












