திருகோணமலையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்!
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் அமைந்துள்ள பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நேற்று (03) நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம்
அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், திருகோணமலையில் அமைந்துள்ள பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
காலநிலை மாற்றம், உயிர்ப்பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதியினால் தெளிவூட்டப்பட்டன.
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 4 நாட்கள் முன்

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan

Optical illusion: கண்களை ஏமாற்றும் இந்த படத்தில் இருக்கும் '6' இலக்கங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
