முல்லைத்தீவில் இடம்பெற்ற திறன் மேம்பாடு மற்றும் பணி உத்வேகம் தொடர்பான பயிற்சி நெறி கருத்தரங்கு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பணி உத்வேகம் தொடர்பா இரண்டு நாள் பயிற்சி நெறி கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சி நெறி கருத்தரங்கு நேற்று(19) இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய முதல்நாள் நிகழ்வில் கரைதுறைப்பற்று செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.கயேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் சமுக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் சோ.ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன்படி பயிற்சியின் வளவாளராக உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சி.அமல்ராஜால் விரிவுரைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தவசீலன்